மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.



மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்திரவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையினை அவர்கள் எரிக்க முயன்ற போது காவல் துறையினர் அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடுப்புகளை மீறி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.



இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...