பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்- உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பேச்சு


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தூய்மை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகரத்தில் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பை தரத்தை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் வார்டுவாரியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்செல்கின்றனர். மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையினை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். தொடர்ந்து, கோவை மாநகராட்சியை சுகாதாரமிக்க, தூய்மையான மாநகரமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...