கல்குவாரியால் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமம் பெரியகோட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியால் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...