விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வண்டல் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாரி வண்டல் மண் வழங்கும் பணி குறித்து வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள் மற்றும் 246 குளங்களில் தூர்வாரும் மற்றும் இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் 4000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.



வட்டாட்சியர் அலுவகத்தில் விவசாயிகள் சிட்டாவுடன் விண்ணப்பித்து, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் மண்ணும், புஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவிற்கும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர், அல்லது 10 டிராக்கடர் லோடு மண்ணும், மண்பாண்டங்கள் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு குளங்கள் தூர்வாருவதன் மூலம் குளங்களை ஆலப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் விலைநிலங்களுக்கு பயன்படுத்துவதற்கான உரமண்ணும் விலையில்லாமல் கிடைக்கிறது. மேலும், மழைக்காலங்களில் போதிய அளவு நீர் தேக்கிக்கொள்ள முடியும். இதன்மூலம் எதிர்க்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாய பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திர சேகர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலாகள், பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...