தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி- காஷ்மீர் வரை புல்லட் பயணம் கோவையில் துவக்கம்

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான புல்லட் பயணத்தினை பைக்ரைடர்ஸ் கிளப்பை சார்ந்த மூன்றுபேர் கோவையிலிருந்து துவங்கினர்.



கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து  ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.



சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...