ஆவாரம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகள், கோவில்கள் நிறைந்த இப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்கடையினை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளத நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்கள் நடைபெறவும் காரணமாக இருப்பதாகவும், இங்குள்ள பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையினை அகற்ற அரசிற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...