ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்தபடி ஏடிஎம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகின்ற பணத்தை பணியாளர்களது கணக்கில் வரவு வைத்து விவரம் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி மூலம் கொண்டுவரப்படும் பொருட்களை எடைபோட்டு வாங்க எடைதராசினை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நடைமுறைபடுத்த வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நியாயவிலைக் கடையில் தேங்கிக்கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்வதற்கு சீரான விற்பனை கொள்கை வேண்டும் எனவும், அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...