கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...