அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட லிங்கனூர் சாலை, அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகள், துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவது, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.





மேலும், அப்பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிப் பூங்காவின் நடைபாதை பணிகள், சுற்றுசுவர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும், நீர்தேக்கத் தொட்டியின் நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து, குளோரின் அளவு போதுமான அளவு உள்ளதா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.





Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...