கல்லீரல் அறுவை சிகிச்சையை சிறப்பிக்க ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, சென்னை கிளானிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியுடன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

கோவை, அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை உயர்தர சிகிச்சை, சரியான கட்டணத்தில் நோயாளிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, சென்னையில் உள்ள, சர்வதேச அளவில்  கல்லீரல் மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் முகமது ரெலா தலைமையிலான குழு உள்ள கிளேனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவை ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி கிளோனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று பிரிவு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், கிளோனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் தினேஷ் ஜோதிமணி, இளங்குமரன் கலியமுர்த்தி, ராஜேஷ் ராஜலிங்கம், ஆனந்த் பரதன் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, மருத்துவமனை அறுவை சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள நிபுணர்களுக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் படிப்படியாக அளிக்கப்படும். கல்லீரல் சிகிச்சை, மயக்கவியல், கல்லீரல் தீவிர சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சிகிச்சை, தொற்று நோய்களுக்கான மாற்று சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தொழில்நுட்பங்களை வழங்கும்.

அறுவை அரங்கில் பணியாற்றும் செவிலியர்கள், தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள், வார்டு செவிலியர்கள் ஆகியோருக்கும் சென்னை குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் பயிற்சிகள் தரப்படும். படிப்படியான, நிலையான கல்லீரல் மாற்று சிகிச்சை தொழில்நுட்பங்கள், ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மாற்றப்படும். கல்லீரல் பிரிவில் பாதுகாப்பான, சிறப்பான சிகிச்சை தரும் மருத்துவமனையாக இந்த ஒப்பந்தத்தால் மாற்றம் பெறும்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவில் உலகில் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் பெற்றதாக மாறும். இந்த மண்டலத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சிறப்பான, தரமான, சரியான கட்டணத்தில் மருத்துவ சேவையை தருவதாக அமையும்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...