சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம்

கோவை மாநகரில், காந்திபுரம் பகுதியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு அலுவலகத்தின் மீது மதவெறிகொண்ட, சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயக பூர்வமான விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற, சங்பரிவாரக் கும்பல்களின் வன்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கும் நடவடிக்கையில் ஒரு பிரிவு மதவெறிக் கும்பல் ஈடுபட்டதையும், மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அலுவலர்கள், பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை சகித்து கொள்ள முடியாத, சமூக விரோதக் கும்பல் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியுள்ளது. பசுக் காவலர்கள், காதலர் கண்காணிப்புக் குழுக்கள், மதக் காவலர்கள் என்ற பெயர்களில் செயல்படும் வன்முறைக் கும்பல்களுக்கு ஆதரவுகாட்டும் மோடி அரசின் கொள்கைகள் வன்செயல்கள் அதிகரிக்க காரணமாகும். 

தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து, கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள், சமூக நல்லிணக்கம் காப்போர், அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...