துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் நலச்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சியும் வர்தான் இன்ப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கண், பல், இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ECG, Echo போன்ற இருதய சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் 650 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 112 நபர்களுக்கு கண் சம்பந்தமான நோயும், 246 நபர்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகளும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை சம்பந்தமான பரிசோதனையில் 60 நபர்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ECG மற்றும் Echo எடுக்கப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற மண்டலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துவது குறித்தும், புகை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவை தவிர்ப்பது குறித்தும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...