குடிமைப்பணிக்கான முதனிலை தேர்வு தொடர்பான முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை (18.06.2017) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் (Preliminary) தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான முன்னனேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில், கோவை மாவட்ட UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் / தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் முன்னிலையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22 மையங்களில் மொத்தம் 8755 நபர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இந்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இத்தேர்வுகள் இருப்பதால் அனைத்து அலுவலர்கள் கவனமுடன் பணியாற்றிட வேண்டும். அனைத்து தேர்வாளர்களும் கண்டிப்பாக கணிப்பான், அலைப்பேசி போன்ற எவ்வித மின்னனு உபகரணங்கள் எடுத்து வரக்கூடாது. தேர்வறை கண்காணிபாளர்கள் இதை உறுதி செய்திடல் வேண்டும். காவலர்கள் போதிய அளவில் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற எண்களிலோ தேர்வாளர்கள், தேர்வு நடத்துவர்கள், அலுவலர்கள் தொடர்பு கொள்ளலாம். கடந்த முறைபோலவே எவ்வித சிரமங்களின்றி அனைவரும் சிறப்பான முறையில் பணியற்றிட வேண்டும்.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் / தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...