கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டக் காவல் துறை, வனத் துறை மற்றும் நெஸ்ட் அமைப்பினர் இணைந்து இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமை கல்லட்டி சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் ஒன்றினை நடத்தினர். இந்த முகாமை உதகை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.



இந்த முகாமையொட்டி கல்லட்டி மலைப் பாதை முதல் மாவனல்லா பகுதி வரை சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். இப்பணியில் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பாம்பு கடித்தால் வனப்பகுதிகளில் இருந்து உதகை கொண்டுவர சுமார் இரண்டு மணி ஆகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இம்முகாமின் போது, வனத்துறையினருக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த ஆயூர்வேத மருந்து உயிர் இழப்பு ஏற்படாமல்  இரண்டு மணி நேரம் பாதுகாக்கும் எனபது குறுப்பிடத்தக்கதாகும். இம்மருந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் வடக்கு வன கோட்ட ரேஞ்சரிடம் வழங்கினார்.



இம்முகாம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதை வலியுறுத்தும் விதமாகவே இத்தகைய முகாம் நடத்தப்பட்டது. இனி, மாதந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...