கோவையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வு இன்று (மே 18) நடைபெற்றது. நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித மரியண்னை மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கல் மேலநிலைப்பள்ளி, புனித காணிக்கை அன்னை மேல்நிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையமான சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்த தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,



மத்திய  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 8748 நபர்களில் 3943 நபர்கள் தேர்வெழுதினர், 4805நபர்கள் தேர்வெழுதவில்லை. 



இத்தேர்வினை சிறப்பாக நடத்தவும், அவற்றினை கண்கானிக்கவும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கோவை மாவட்ட யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்களும் அனைத்து மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை ஆட்சியர் நிலையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அவற்களும் சிறப்பான முறையில் பணியாற்றினர். 

இத்தேர்வினை சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...