ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய மூன்று மாதங்கள் தாமதாமாகும் என்பதால் ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகள் அதிர்ச்சி- சைமா

ஒட்டு மொத்த ஜவுளி பிரிவில் ஒரு கோடி ரூபாய் மூலதனத்திற்கு 100 முதல் 150 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆயத்த ஆடை மற்றும் படுக்கை விரிப்புகள் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட கூலி வேலைக்கு நடைபெற்ற ஜிஎஸ்டி குழுவின் கூட்டத்தில் 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீதான வரியை 18-யில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இது வரை நூற்பாலை துறை விருப்ப வரி மற்றும் 12.5 சதவிகித மத்திய கலால் வரியை செயற்கை பஞ்சு மீது செலுத்தி வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி குழுவின் முடிவான வரி விதிப்பில் மாற்றம் என்பது மூன்று மாதங்களுக்கு பிறகுதான் என்ற அறிவிப்பு செயற்கை துணி மற்றும் ஆயத்த ஆடை துறையினருக்கு பேரடியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து சைமா சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் எம்.செந்தில்குமார், ஒட்டு மொத்த பருத்தி ஜவுளி பொருட்களுக்கும் 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்தும், நூல் மற்றும் துணி கூலி வேலைகளுக்கு 5 சதவிகித சேவை வரி அட்டவணையில் சேர்ந்தமைக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

80 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூலிக்கு வேலை செய்து கொடுப்பவர்கள், இந்த கூலிக்கு வேலை செய்து கொடுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்தால் இவர்களால் ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரி விதிப்பில் எந்த மாற்றமும் மன்று மாதங்களுக்கு பிறகுதான் சாந்தியம் என்பது மொத்த செயற்கை பஞ்சு நூல் நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை துறையினரை பெரிதும் பாதிக்கும். இதனால், பல நூற்றுக் கணக்கான ஆலைகள் மூடப்பட்டு பல இலட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று சைமா தலைவர் தெரிவித்தார்.

ஜவுளித்துறையினர் சரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வர அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நல்க தயார் என்றும் அதன் மலம் அரசு வரி வருவாய் அதிகமாகும் என்றும் செந்தில்குமார் கூறினார்.

மேற்கூறிய நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டால் அரசுக்கு வரி வருவாய் கூடும் என்றும், மேலும், ஜவுளித்துறையினருக்கு போட்டியிட சமதளம் உருவாக்கும் என்னும், அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலை உயர்வில் துணிகள் கிடைக்கும் என்னும் சைமா தலைவர் கூறினார்.

எனவே, மேற்கண்ட ஜிஎஸ்டி பிரச்சனைகளை ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பல இலச்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆயத்த ஆடை மற்றும படுக்கை விரிப்பு சம்பந்தப்பட்ட கூலி வேலைகளை 5 சதவிகித சேவை வரி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீதான வரியை 18-யில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆகியோருக்கு சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...