சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை உடல்நலக்குறைவால் பலி

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன.  இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றுவட்டார குடியிருப்பு, விவசாய பகுதிகளில் நுழைவது வழக்கம். 

இந்த நிலையில், சிறுமுகை வனச்சரக வனத்துறையினர் கூத்தம் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அணையின் நீர்த்தேக்க பகுதி அருகே ஒரு காட்டு யானை கீழே விழுந்து எழும்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கீழே விழுந்த யானை 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிய வந்தது. வயதானதால் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் யானை தவறி கீழே விழுந்திருப்பதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அழித்து வந்தனனர். இதில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வனத்துறையில் தொடர்ந்து அந்த யானையினை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த யானை உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அதேப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...