கொலை வழக்கு சாட்சிகளை வழக்கறிஞர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த அம்மாசை (43) என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாசை கொலை வழக்கில் முறையான நீதி வேண்டி சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆதிகணேசன் என்பவர் 'அம்மாசை கொலை- நீதிக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பு தொடங்கினார்.



இவ்வழக்கு விசாரணை நேற்று முன் தினம் கோவை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சாட்சியளிக்க சென்ற ஆதிகணேசனுக்கு வழக்கறிஞர் ராஜவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இது குறித்து ஆதிகணேசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், அம்மாசை கொலைவழக்கு சாட்சியங்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ராஜவேல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிகணேசன் அம்மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...