வேளாண் பல்கலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மூன்றாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி தலைமையுரை வழங்கினர்.



அப்போது அவர் பேசுகையில், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மூலம் உற்பத்தியை பெருக்கி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் கடமை இருப்பதால் தங்களை உடலிலும், மனதிலும் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் யோகாக்கலையே அதற்கு பெரிதும் துணைபுரியும். சற்றே மாறுபட்டாலும் குருகுல முறை இந்தியாவில் தொன்றுதொட்டு பயன்பாட்டில் உள்ளதை யோகாக்கலை மூலம் தெளிவாக அறியலாம்.



யோகாக்கலை அறிவியல் பூர்வமானது, இதனை கடைபிடிப்பதில் உடல் நலம், மன நலம் இரண்டும் ஒருங்கே பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்றும் கூறினார்.

கோவை மண்டலத்தின் உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் ரா.பச்சையப்பன் மற்றும் செயலாளர் மற்றும் இணை இயக்குனர் (விரிவாக்கம்) பி.ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



பின்னர் மாணவ, மாணவியர் அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையில் செய்யும் பயிற்சிகள், "TNAU" என்ற எழுத்துக்கள் வடிவில் நிற்றல் மற்றும் கண் பயிற்சி போன்றவற்றை செய்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் யோகா செயல் விளக்கம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.



விழாவிற்கு பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.ஆனந்தகுமார், வேளாண் கல்லூரி முதன்மையர் ச.மகிமைராஜா மற்றும் பேராசிரிகர்கள் பங்குக் கொண்டு சிறப்பித்தனர். உலக சமுதாய சேவை மைய யோகா ஒருங்கிணைப்பாளர் ரமா ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். டி.அருன் குமார் முதலாமாண்டு (வேளாண்மை) மாணவர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...