பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாரதியார் பல்கலை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 900-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...