பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாரதியார் பல்கலை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 900-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...