உதகையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் நிலவி வந்ததால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.

விவசாயத்திற்கான நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடக்கத்தின் காரணமாக அவ்வப்போது நீலகிரி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் பெய்யத்துவங்கிய மழை இரண்டு மணி நேரத்தினையும் கடந்து கன மழையாக பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக வனங்களில் பசுமை திரும்பும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...