சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவியை தாக்கிய பேரூராட்சி முன்னாள் தலைவர் தலைமறைவு

சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம். தமிழக இடைக்கால முதலமைச்சராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினை சேர்ந்த இவர் சூலூர் பேரூராட்சி பணிகளுக்காக சேகரிக்கப்படும் மணல்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சூலூர் ஒன்றியத்தின் மகளிர் அணித் தலைவி ராதாமணியின் தூண்டுதளின் பெயரிலேயே அனைத்துக் கட்சிகள் இப்பிரச்சனையில் தலையிடுவதாகக் கூறி சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து ராதாமணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராதாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

முன்னதாக, சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவி ராதாமணி கடந்த வாரம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...