தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் ஜூலை முதல் வாரத்தில் துவக்கம்

கோவை மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் வரும் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதன் முதன் நிகழ்ச்சியாக ஜூலை 3ம் தேதியன்று மாணவ, மாணவியர் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.

இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குதிரைப் பந்தய சாலை வழியாக சென்று அரசினர் கலைக் கல்லூரியை சென்றடையும்.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 4ம் தேதியன்றும், கிணத்துக்கடவு டிஇஎல்சி சீனியர் பெர்ஜென்டல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5ம் தேதியன்றும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 6ம் தேதியன்றும், தொடர்ந்து, ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 7ம் தேதியன்றும் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.

மேலும், இந்நிகழ்ச்சிகளுடன் தாலுகா தலைமையிடங்களிலும் நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் தொழில்நெறி வழிகாட்டும் பிபிடி, பேனர்கள் மற்றும் சார்ட்டுகள் மூலம் விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் பண்பலைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட இளைஞர்கள் மேற்காணும் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...