நீர் தேக்கத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தபெதிக-வினர் மனு

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள நீர்த்தேக்கக் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில் கட்ட முயற்சிப்பதாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...