கோவையில் 450 கிலோ எடையிலான எரிவாயு "ஜம்போ சிலிண்டர்" அறிமுகம்

பெரு நிறுவனங்கள் மற்றும் பெரிய உணவகங்கள் பயன்பெறும் வகையில் 450 கிலோ எடையிலான எரிவாயு சிலிண்டரை "ஜம்போ சிலிண்டர்" என்ற பெயரில் இந்தியன் ஆயில் நிறுவனம் கோவையில் இன்று அறிமுகம் செய்தது.



பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 450 கிலோ எடையில் ஜம்போ என்ற பெயரில் பெரிய அளவிலான எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிலிண்டர் அறிமுக விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சிலிண்டரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் சித்தார்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்டேன் நிறுவனம் முதல் முறையாக அதிக எடை கொண்ட இந்த சிலிண்டரை அறிமுகம் செய்கிறது. இதன் விலை 24 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை பெற ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 64 சதுர அடி பரப்பளவில் இந்த சிலிண்டரை வைத்துக்கொள்ளலாம்.



வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சிலிண்டர்களை விட இந்த சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. எரிவாயு கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் இதில் இருக்காது. எளிதாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஜம்போ சிலிண்டர் இன்று முதல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்யும். இது வரை இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த 44 லட்சத்து 43 ஆயிரத்து 667 வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மானியம் தேவையில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். நெல்லையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன சேமிப்பு கிடங்கு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...