ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் ஆர்பாட்டம்

தமிழகத்தில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடி அடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து , ஊருக்குள் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் , உள்ள முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கதிரமங்கலத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்தில் இருந்து அகற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தமிழகத்தின் எண்ணை வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...