தென்னம்பாளையம் அருகே காவலாளிக்கு துப்பாக்கிச் சூடு



கோவை மாவட்டம், அம்மன் குளம் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் அரசூர் பிரிவு தென்னம்பாளையம் பகுதியில் செல்வகுமார் என்றவருக்கு சொந்தமான உணவு விடுதியில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த உணவகத்தில் மது பானம் முறையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விடுதி உரிமையாளர் செல்வகுமார் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். பின்னர் கதவை மூட கூறியவர் மது போதையில் காவலாளி தேவராஜை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தேவராஜ் மயங்கி விழுந்ததால் பதற்றம் அடைந்த செல்வகுமார் மற்றும் மேலாளர் சக்தி இருவரும் செல்வராஜின் முதுகில் பாய்ந்த குண்டை நீக்கிவிட்டு, பின் அவரது வாயில் மதுவை ஊற்றியதாக காயமடைந்த செல்வராஜ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய தேவராஜ், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். வலி அதிகமாகவே பின் தனது மனைவியிடம் பணிபுரியும் இடத்தில் நடந்ததை கூறினார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற நிலையில் சட்டம் சார்ந்த பிரச்சனை என மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. 

தொடர்ந்து உணவு விடுதியின் உரிமையாளர் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அடுத்து செல்வராஜ் தென்னம்பாளையத்தில உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது சாதாரண துப்பாக்கியால் ஏற்பட்ட காயம், இதை பெரிது படுத்த வேண்டாம் என அலட்சியமாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...