தென்னம்பாளையம் அருகே காவலாளிக்கு துப்பாக்கிச் சூடு



கோவை மாவட்டம், அம்மன் குளம் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் அரசூர் பிரிவு தென்னம்பாளையம் பகுதியில் செல்வகுமார் என்றவருக்கு சொந்தமான உணவு விடுதியில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த உணவகத்தில் மது பானம் முறையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விடுதி உரிமையாளர் செல்வகுமார் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். பின்னர் கதவை மூட கூறியவர் மது போதையில் காவலாளி தேவராஜை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தேவராஜ் மயங்கி விழுந்ததால் பதற்றம் அடைந்த செல்வகுமார் மற்றும் மேலாளர் சக்தி இருவரும் செல்வராஜின் முதுகில் பாய்ந்த குண்டை நீக்கிவிட்டு, பின் அவரது வாயில் மதுவை ஊற்றியதாக காயமடைந்த செல்வராஜ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய தேவராஜ், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். வலி அதிகமாகவே பின் தனது மனைவியிடம் பணிபுரியும் இடத்தில் நடந்ததை கூறினார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற நிலையில் சட்டம் சார்ந்த பிரச்சனை என மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. 

தொடர்ந்து உணவு விடுதியின் உரிமையாளர் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அடுத்து செல்வராஜ் தென்னம்பாளையத்தில உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது சாதாரண துப்பாக்கியால் ஏற்பட்ட காயம், இதை பெரிது படுத்த வேண்டாம் என அலட்சியமாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...