அரசு அதிகாரிகள் ஊழல் புகார் மீது நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக புகார் அளித்ததிற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாடற்ற வெளிப்படையான ஊழல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 6ம் தேதியன்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி இன்று ஊழல் தடுப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி அலுவலகம் உள்ளது என்றும் அதனை அணுகுமாறும் மாவட்ட நிர்வகத்தால் ஊழல் தடுப்பு இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழல் தடுப்பு இயக்கத்தினர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களுடைய குறைகளை சொல்லும் நிலையில், சாதாரண பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...