தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கொசுவினால் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டது. 

மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், பொது மக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...