கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி- பொள்ளாச்சி- கோவை-க்கு ரயில் சேவை துவங்கம்


கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை- பொள்ளாச்சி வரை செல்லும் அகல ரயில் பாதை பாசஞ்ஜர் ரயில் இன்று மதியம் 1.35 மணிக்கு துவங்கியது.

கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துகடவு வழியாக பொள்ளாச்சி வரை செல்லம் பாசஞ்ர் ரயில் இன்று தனது சேவையினை துவங்கியது. கோவையிலிருந்து போத்தனூர் வரை ஏற்கனவே அகல ரயில் பாதை உள்ள நிலையில் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதையாக மாற்ற பல வருடங்கள் கடந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த போது விரைவில் சேவை துவங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து பயணிகளுக்கான ரயில் சேவை இன்று துவங்கியது. 

தினமும் மதியம் 1.35-க்கு கோவையிலிருந்து, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி சென்றடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.50-க்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது.

இதற்கான கட்டணம் 15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் கூறும்போது, மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...