பிக்பாஸ் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்திருக்கின்றது. கர்நாடக சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச் சாலையிலும் சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரியான சக்திகளை தமி்ழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பினை பயன்படுத்தி சில இடங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்துள்ளது. சில இடங்களில் தெரியாமல் நடக்கும் இது போன்ற தவறுகளை 3 மாதத்திற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்களுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சசிக்கலாவிற்கு என தனியாக சமையல் அறை அமைத்து இருப்பது பணத்திமிறை காட்டுகின்றது. இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது தவறானது. 

சிஸ்டம் சரியில்லை என தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி. 

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சொல்வது தவறானது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களும் தமிழர்கள்தான். ஊடகங்கள் மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர்". 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...