ஆம்புலன்சுகளுக்கு வழி விடும் சிக்னல்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் இயந்திரம்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளிலும், சிக்னல்களிலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி விழி பிதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...