ஆம்புலன்சுகளுக்கு வழி விடும் சிக்னல்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் இயந்திரம்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளிலும், சிக்னல்களிலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி விழி பிதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...