அடியாட்களை வைத்து மிரட்டும் பைனான்சியல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சிங்காநல்லூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனம் பணத்தை கட்டச் சொல்லி வீட்டிற்கு வந்து அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக காங்கேயம்பாளையம் பகுதி மக்கள் சுமார் 18 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

சிங்காநல்லூர் அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திடம் தொழில் துவங்க பணம் பெற்றோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் ராமநாதன் திடீரென இறந்துவிட்டார். இதனால், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டாம் என வசூல் செய்யும் நபர்கள் வீட்டிற்கு வந்து கூறினர். மேலும், கடந்த 7 மாதமாக பணம் வசூலிக்க யாரும் வரவில்லை.

இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மீண்டும் பணம் வசூலிக்க வந்தனர். வேலையின்றி தவித்துவரும் நாங்கள் உடனடியாக பணம் செலுத்த முடியாத நிலை குறித்து விளக்கியும் அடியாட்களைக் கொண்டு வீட்டிற்கு வந்து மிரட்டிச் செல்கின்றனர். நாங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்த ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் கிளை அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...