பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2016- 1017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2017-2018 ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் கோவை மாவட்ட விவசாயிகளை சென்றடைய ஏதுவாக வேளாண்மைத் துறையினரால் கிராம அளவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும், வட்டார அளவில் தகவல் மற்றும் சேவை மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு இத்திட்டததில் சேர வேண்டிய உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...