கோவையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 320 கோடி மதிப்பில் புறவழி சாலை- நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு


கோவை, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை ரூ.168 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தடையின்மை சான்று கேட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், உடனடியாக 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. ஒப்பந்தம் இறுதியாகும் நாளில் இருந்து, நான்கு மாதத்துக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், அரசுத் தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்படுவர். ஓராண்டுக்குள் பாலம் கட்டுமான பணி துவக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை நகருடன் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகள் இணைகின்றன. ஆறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்து மற்றொரு பகுதிக்கு செல்வதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓரிடத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வீணாகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் முடிவு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 



இதில், மேட்டுப்பாளையம் சாலை - சத்தி சாலை - அவிநாசி சாலை - திருச்சி சாலையை இணைக்கும் வகையில் அரைவட்ட சாலை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது. குனியமுத்துாரில் இருந்து மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரை சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையும் வகையில் ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எந்தெந்த இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிற கள ஆய்வில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...