கோவையில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் உள்ள 'பைக் பார்க்கிங்'-களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...