வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து மாநகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் துணை ஆணையர் ப.காந்திமதி தலைமையில், வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயதுக்குள் இருக்கின்றவர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்குவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் வாக்காளர் பட்டியலில் 31.07.2017 வரை சிறப்பு முகாம் நடத்தி தகுதியான நபர்களை சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்கல் படிவத்தினை வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் படிவங்கள் பூர்த்தி செய்து பெற தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் 23.07.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...