வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, வால்பாறையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.



இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது. 



இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...