பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்த 'ஸ்மார்ட் பென்ச்' திட்டம்


கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 'ஸ்மார்ட் பென்ச்' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மாதிரி திட்டத்தை செயல்படுத்தினர். இதன் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலர் தற்போது இந்த ஸ்மார்ட் பென்ச்யை பயன்படுத்தி வருகின்றனர்.



கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் மரம் வடிவத்திலான 'ஸ்மார்ட் பென்ச்' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகப்படுதப்பட்டுள்ளது. இந்த 'ஸ்மார்ட் பென்ச்' மூலம் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளதால் கோவையில் பல்வேறு இடங்களில் இந்த வகையான ஸ்மார்ட் பென்ச் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில்  "முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 ஸ்மார்ட் ட்ரீ அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது" எனக் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...