'ஏ' சான்றிதழை கலாய்க்கும் 'தரமணி'

தரமான படங்களை இயக்கிவரும் ராம்-யின் அடுத்த திரைப்படம் தரமணி. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராம்-ன் தங்க மீன்கள் படத்திற்கு பின்பு வேறு எந்த படமும் வெளியாகாததால், தரமணி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தரமணி போஸ்டர் இன்று இயக்குனர் ராம்-ன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டரில் படத்திற்கு அளிக்கப்பட்ட 'ஏ' சான்றிதழை கலாய்க்கும் விதமாக வாசகம் இடம்பெற்றுள்ளது. 

"தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் U/A. பெண் 'ரா'வாக மது அருந்தினால் A. ஆக தரமணி A" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்ற இந்த வாசகத்தின் மூலம் பெண் மது அருந்தும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு தணிக்கைக்குழு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...