'ஏ' சான்றிதழை கலாய்க்கும் 'தரமணி'

தரமான படங்களை இயக்கிவரும் ராம்-யின் அடுத்த திரைப்படம் தரமணி. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராம்-ன் தங்க மீன்கள் படத்திற்கு பின்பு வேறு எந்த படமும் வெளியாகாததால், தரமணி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தரமணி போஸ்டர் இன்று இயக்குனர் ராம்-ன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டரில் படத்திற்கு அளிக்கப்பட்ட 'ஏ' சான்றிதழை கலாய்க்கும் விதமாக வாசகம் இடம்பெற்றுள்ளது. 

"தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் U/A. பெண் 'ரா'வாக மது அருந்தினால் A. ஆக தரமணி A" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்ற இந்த வாசகத்தின் மூலம் பெண் மது அருந்தும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு தணிக்கைக்குழு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...