அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கோவையில் செயல்படும் காதுகேளாதோர் பள்ளிக்கு மாற்றம்



திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களை கோவையில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் சேர்க்குமாறு கோவை மாவட்ட​ ​ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கோதபாளையத்தில் திருப்பூர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் முருகசாமி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பள்ளியில் பயிலும் சுமார் 110-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது. இந்நிலையில் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மற்றும் இன்பண்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழ்களை பெற்று உடனடியாக புதிய பள்ளிகளில் மாணவர்களை சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...