விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன. 

எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...