ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” அனுசரிப்பு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒவ்வோர் வருடமும் ரமளான் பெருநாள் முடிந்த பின் மாநகரின் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் என பலதரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் நல்லிணக்கம் பேணும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியினை முஹம்மது முஸ்தபா துவக்கி வைத்தார். இந்த பெருநாள் சந்திப்பின் நோக்கம் மற்றும் ஜமாஅத்தின் பணிகள் குறித்து கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் ஜனாப். கே.ஏ.சையது இப்ராஹிம் உரையாற்றினார்.



தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே புரிதல்கள் மேம்படவேண்டும் என்றும், இத்தகைய சந்திப்புகள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விரைவு அதிரடிப்படை 105-வது படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் சுந்தரக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் அனந்த கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அருட்தந்தை ஜான் பீட்டர், இயக்குனர், திவ்யோதயா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...