ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” அனுசரிப்பு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒவ்வோர் வருடமும் ரமளான் பெருநாள் முடிந்த பின் மாநகரின் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் என பலதரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் நல்லிணக்கம் பேணும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியினை முஹம்மது முஸ்தபா துவக்கி வைத்தார். இந்த பெருநாள் சந்திப்பின் நோக்கம் மற்றும் ஜமாஅத்தின் பணிகள் குறித்து கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் ஜனாப். கே.ஏ.சையது இப்ராஹிம் உரையாற்றினார்.



தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே புரிதல்கள் மேம்படவேண்டும் என்றும், இத்தகைய சந்திப்புகள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விரைவு அதிரடிப்படை 105-வது படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் சுந்தரக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் அனந்த கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அருட்தந்தை ஜான் பீட்டர், இயக்குனர், திவ்யோதயா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...