வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் தன்னலமற்ற சேவைபுரிந்த ​​​​ஊர்க்காவல் படை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதியின் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் திட்டமிட்ட காவல் பணி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆலோசனைப்படி கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் 24.7.2017 மாலை முதல் 25.7.2017 மதியம் 2 மணி வரை சேவையாற்ற பணி ஒதுக்கப்பட்டது.



வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படை நண்பர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சொந்த பணி முடித்து காவல் பணியாற்றுவது தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பணிக்கு அர்ப்பணிப்புக்காக 24.7.2017 இரவு வரை உறக்கம் துறந்து, அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சிரமம் இல்லாமல் பாதுகாப்பாய் குண்டம் இறங்க வரிசைப்படுத்தி, பொதுமக்களிடையே பொறுமையாய் நடந்து கொண்டு சேவையாற்றினர். இதில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும், இந்த ஆத்மார்த்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...