வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் தன்னலமற்ற சேவைபுரிந்த ​​​​ஊர்க்காவல் படை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதியின் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் திட்டமிட்ட காவல் பணி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆலோசனைப்படி கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் 24.7.2017 மாலை முதல் 25.7.2017 மதியம் 2 மணி வரை சேவையாற்ற பணி ஒதுக்கப்பட்டது.



வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படை நண்பர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சொந்த பணி முடித்து காவல் பணியாற்றுவது தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பணிக்கு அர்ப்பணிப்புக்காக 24.7.2017 இரவு வரை உறக்கம் துறந்து, அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சிரமம் இல்லாமல் பாதுகாப்பாய் குண்டம் இறங்க வரிசைப்படுத்தி, பொதுமக்களிடையே பொறுமையாய் நடந்து கொண்டு சேவையாற்றினர். இதில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும், இந்த ஆத்மார்த்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...