ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 'மாஸ்க்' அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை, பாரதியார் பல்கலைக் கழகம் BSMED நேச்சர் கிளப், கலாம் மக்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்தும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம், பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...